கருவிழி
மேகங்கள்
கண்ணுக்குள்
மோதிக்கொண்டு
கருங்குளத்து
நீர்
இதயக் குளத்தின்
செந்நீர்
சிதறி
சாலையில் ஓடுதடி-
என்னை
சோகத்தில்
வாட்டுதடி.
வாய்க்
கமலத்தில்
வடிந்து விட்டால் -
நீ
மகிழ்ச்சியால் சற்று
சிரித்து விட்டால் - என்
இதயத்தின் நீரெல்லாம்
ஓட மறுத்து
ஒரு நிமிடம்
உறைந்து
உன் அழகை
ரசிக்குதடி
உன்னை முத்தமிட
துடிக்குதடி
கண்கள் தான் காதலின்
பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள்
- உன்
கண்ணீரல்லவா என் உயிரின்
இருப்பிடம்
நான்
சொல்கிறேன்.
சிந்தி விடாதே - என் செல்லமே
!
கண்ணீரை மட்டுமல்ல -
என்
காதலையும் தான்.
-சத்தியசீலன்
No comments:
Post a Comment