உண்மை காதலின் குழந்தை...!!!

ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில்
ரசித்து புரிந்தவை சில
புரியாமல் கடந்து வந்தவை பல 
ஒரு புதிர்-விடை தேடி 
ஓடி முடிவதற்குள் 
அடுத்தடுத்த கேள்விகள் 
வாழ்கையின் அர்தத்தை 
சிந்திக்க நேரமற்று 
ஓட்டம் மட்டும் முடிவாக 
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!

ஆயிரம் ஆசைகள் 
வந்து போயின 
அதில் அடைந்தது என்ன 
இழந்தது என்ன 
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான் 
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே 
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!

கடந்து வந்த காலத்தில் 
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில் 
ஓடி ஒளிந்ததனால் 
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில் 
உன் வயது என் அனுபவம் என்று 
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்  
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல் 
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே 
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!! 

வயதல்ல அனுபவம் 
முகம் கொடுத்து முன்னின்று 
முயற்சி செய்ததில் 
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட 
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!

நெற்றிகாசை எதிர்பார்த்து 
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை 
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!

மனங்களை நோகடித்தேனும் 
பணங்களை அடையலாம் தவறில்லை 
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில் 
உடன்பாடில்லா புதுமை விதிகள் 
மனிதத்தை வளர்ப்பதற்காக  என்று  
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!

பருவத்தில் வரும் காதல் போல் 
ஈர்பில் வருவது இவையெல்லாம் 
உண்மை காதல் மலர்ந்து 
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை 
உண்மைபோல்  தோன்றும்  இவையனைத்தும் 
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!

எதுதான் உண்மை காதல் 
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல் 
அவர்கள் குழந்தைதான்  எது 
கல்லறை.

No comments:


Get this gadget at facebook popup like box