உனக்கும் எனக்கும் பகையிருந்தால் !!!
உன்னை விட என்னோடு யாரும்
அக்கறையோடு பழகியதில்லை
என் மீதான உன் பாசம்
அளவிடமுடியாதது என...
எனக்கும் தெரியும் -ஆனால்
நீ என்னை வெறுப்பது போல
நடந்துக் கொள்கிறாய்- இப்போது
ஏன் என தெரியவில்லை
எதாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிடு
என்றோ அடையும் துயரத்தை
இன்றே அடைந்துவிடுகிறேன்
காத்திருப்பது காதலுக்கு வேண்டுமென்றால்
சுகமாயிருக்கலாம்
மெளனமாக நீயிருப்பதோ..என்
மனதிற்க்கல்லவா சுமையாக இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment