உனக்கும் எனக்கும் பகையிருந்தால் !!!


உன்னை விட என்னோடு யாரும்
அக்கறையோடு பழகியதில்லை

என் மீதான உன் பாசம்
அளவிடமுடியாதது என...
எனக்கும் தெரியும் -ஆனால்


நீ என்னை வெறுப்பது போல
நடந்துக் கொள்கிறாய்- இப்போது
ஏன் என தெரியவில்லை

எதாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிடு
என்றோ அடையும் துயரத்தை
இன்றே அடைந்துவிடுகிறேன்

காத்திருப்பது காதலுக்கு வேண்டுமென்றால்
 சுகமாயிருக்கலாம்
 மெளனமாக நீயிருப்பதோ..என்
 மனதிற்க்கல்லவா சுமையாக இருக்கிறது

No comments:


Get this gadget at facebook popup like box